20 ஆண்டுகள் வீடில்லாமல் இருக்கும் சாட்டையடி மக்களுக்கு வீடு வழங்க வலியுறுத்தல்

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வீடில்லாமல் சாலையில் தங்கியிருக்கும் சாட்டையடி மக்களுக்கு வீடு வழங்க வலியுறுத்தி சமூக நீதிக்கட்சிச் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக சமூக நீதிக்கட்சியின் தலைவர் ந.பன்னீர்செல்வம் அளித்துள்ள மனுவில், துடியலூர் சந்தையில் திறந்த வெளியில் வீடில்லாமல் வசிக்கும் சாட்டையடி மக்களின் நிலை பரிதாபத்திற்குரியது. சாட்டையடி மக்களுக்கு கழிவறை உள்ளிட்ட வசதிகளின்றி பெண்கள், குழந்தைகள் திறந்த வெளியில் வசிப்பதும், வளர்மகளிர் நிலையும் மிக மோசமாய் உள்ளது. 



கைகளை அறுத்து சாட்டையால் அடிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். அவ்வாறு பிழைத்து வரும் சாட்டையடி மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக கோவை மாநகரில் இருந்து வருகின்றனர். அம்மக்கள் சுயமரியாதையோடு வாழ மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியரின் தன்விருப்புரிமை நிதியில் இருந்து வீடு வழங்கியும், மாற்றுத் தொழில் செய்ய கடனுதவியும் உடனடியாக வழங்கிட வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...