உதகையில் அன்புச்சுவர் உதவி மையத்தை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகில் இன்று (அக்.,23) நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள அன்புச் சுவர் உதவி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.



 அப்போது அவர் கூறியதாவது, இந்த அன்புச்சுவர் உதவி மையமானது மனிதாபிமானம் மற்றும் பகிர்ந்து வாழும் பண்பை வளர்க்கும் வகையில்  துவக்கப்பட்டு உள்ளது   தமிழகத்தில் முதன்முதலாக திருநெல்வேலி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று உதகையில் தொடங்கப்பட்டுள்ளது. 

செல்வந்தர்கள் மற்றும் உதவி செய்யும் மனம் படைத்தவர்கள் தங்களிடம் நல்ல நிலையில் உள்ள ஆடைகள், காலணிகள் உட்பட இதர பயனுள்ள மக்களுக்கு பயன்படும் அனைத்து பொருட்களையும் கொண்டு வைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. பொருட்களை வாங்க முடியாமல் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையில் வந்து எடுத்து சென்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், உதகை கோட்டாட்சியர் சிவகாமி, நகராட்சி ஆணையர்(பொ) ரவி, சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி, உதகை வட்டாட்சியர் மகேந்திரன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...