நீலகிரியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போலீஸார் விழிப்புணர்வு பிரச்சாரம்

நீலகிரி மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை போலீஸார் ஏற்படுத்தினர்.

குன்னூரில் இருந்து உதகை செல்லும் சாலையில் கேத்தி பகுதியில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா அறிவுரையின்படி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரத்தில் போலீஸார் ஈடுபட்டனர்.

உதகை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் அவர்களின் உத்தரவின் பேரில், கேத்தி காவல் துணை ஆய்வாளர்கள் சிக்கந்தர் மற்றும் ஷர்புத்தீன் ஆகியோர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வின் போது, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு  சாலை விதிமீறல் குறித்து விளக்கினார்கள். அதிவேகமாக பயணித்தல், குடிபோதையில் வாகனம் இயக்குதல், அதிகபாரம் ஏற்றுதல், வாகனம் ஓட்டும் போது தொலைப்பேசி பயன்படுத்துதல், சாலை விதிகளை மீறுதல், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல் ஆகியவை செய்தால் அந்த வாகன ஓட்டியின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...