திரைப்பட பாணியில் வயிற்றில் ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பதுக்கி வந்த வாலிபர் கைது

இலங்கையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் வந்த பயணியின் வயிற்றில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



இலங்கையில் இருந்து கோவைக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த விமானத்தில் பயணி ஒருவர் சட்டவிரோதமாக தங்கத்தை விழுங்கி எடுத்து வருவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சத்தியசீலன் என்ற பயணியை பிடித்து ஸ்கேன் செய்து பார்த்ததில் தங்கக் கட்டிகள் வயிற்றில் இருப்பது தெரிய வந்தது. 



இதைத் தொடர்ந்து, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு 20 சிறிய பாக்கெட்டுகளில் இருந்த தங்கம் வெளியே எடுக்கப்பட்டது. கடைசி ஒரு பாக்கெட்டை எடுக்க 8 மணி நேரம் ஆகியதாக சுங்கத்துறை ஆணையர் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.13 லட்சம் மதிப்புடையது என்றும், இது தொடர்பாக வாலிபர் சத்தியசீலனிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 



நடப்பாண்டில் மட்டும் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 12.145 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.3.69 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



போதைப்பொருட்கள், விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை கடத்தல்காரர்கள் விழுங்கி, வயிற்றில் எடுத்து வரும் நிலையில், முதல்முறையாக தங்கத்தை எடுத்து வந்திருப்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...