பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் போராட்டம்



10-வது இருதரப்பு ஒப்பந்தம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் உள்ள ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவையின் பல்வேறு இடங்களில் ஐ.டி.பி.ஐ. வங்கியானது 9 கிளைகளை நிறுவி, செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 10-வது இருதரப்பு ஒப்பந்தம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.டி.பி.ஐ. வங்கி ஊழியர்கள் இன்று (அக்.,24) முதல் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் ஒருபகுதியாக, பாலசுந்தரம் சாலைப் பகுதியில் செயல்பட்டு வரும் ஐ.டி.பி.ஐ. வங்கியின் முன்பு ஊழியர்கள் 30 பேர் போராட்டம் நடத்தினர். 

போராட்டம் குறித்து கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் பேசுகையில், அனைத்து வங்கிகளிலும் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் முதல் 10-வது இருதரப்பு ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட நிலையில், ஐ.டி.பி.ஐ. வங்கி அலட்சியம் காட்டி வருகிறது. இதனால், ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நிதியாண்டின் முடிவில், ரூ.5,158 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.25,205 கோடியாகும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...