வான்வழி வர்த்தக மேம்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை விமான நிலையம் சார்பில், வான்வழி வர்த்தக மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பீளமேடு அருகே உள்ள சித்ரா பகுதியில் கோவை விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விமானங்கள் வந்து செல்கின்றன. மேலும், கோடிக்கணக்கான ரூபாய் அளவில் வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவை விமான நிலையம் சார்பில் ”வான்வழி வர்த்தக மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பது” குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. 



இதில், கோவை விமான நிலையத் தலைவர் நாராயணன் கலந்து கொண்டு, வான்வழி வர்த்தக மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் கூறுகையில், கோவை விமான நிலையத்தில் உள்ள வசதிகளின் மூலம் அண்டை மாவட்டங்களிலும் தொழில் மேம்படைகின்றன. 

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யும் சரக்குகளை எவ்வாறு கையாள்வது, சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஆவணங்களை சரிபார்த்து விரைவில் அந்தந்த தொழில்சாலைகளுக்கு கொண்டு செல்வது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டதாகக் கூறினார். 

இது தொடர்பாக ஏ.ஏ.ஐ. சரக்கு போக்குவரத்து மற்றும் கூட்டு சேவைகள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேகு கேஜ்டெர் கூறுகையில், தங்களது நிறுவனமானது, நாட்டில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் பணியினை தொழிலதிபர்களுக்கு எளிதாக்குகிறது. சரக்குகளை தானியங்கி மூலம் இயக்கும் நடைமுறை வரும் நவம்பர் மாதம் இறுதிக்குள் கோவை விமான நிலையத்தில் கொண்டுவரப்படுகிறது. இது தொழில்நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

மேலும், ஒரு சில வகை சரக்குகளை எடுத்து வர விமான ஓடுபாதையை அகலப்படுத்த வேண்டும். இருநகரங்களுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரையில் சரக்கு விமானப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகளின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



அண்மையில் கோவை, தில்லி, மற்றும் சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இயக்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல, மேலும் பல விமான சேவைகளை உருவாக்க வேண்டும் என தொழில்நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...