வன்முறையிலிருந்து உலகம் விடுபட சமந்தா கல்வித்திட்ட புத்தகம் வெளியீடு

உலக அளவில் வன்முறையிலிருந்து விடுபட்டு, தலைமை பண்பை பள்ளிக் குழந்தைகளிடையே வளர்க்கும் சமந்தா கல்வித் திட்டப் புத்தகம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து குழந்தைகளின் பாலினத்திற்கும், அனைத்து மதத்தினருக்கும், இனத்துக்கும் ஏற்ப பணியாற்றும் வகையில் உருவாக்கப்பட்டதே சமந்தா திட்டமாகும். ஒருவருக்கு ஒருவர் மரியாதை அளித்து, மரியாதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டு மேம்பாடு செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.

அதற்கான கல்வித் திட்டங்களை உருவாக்கி, மதிப்புகளைக் கொண்டிருப்பதுடன், குந்தைகளின் தன்மையை சமந்தா மேம்படுத்தி வருகிறது. வன்முறைக்கு எதிரான, குறிப்பாக பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க உலகம் முழுவதும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஒருங்கிணைந்த இந்த கல்விதிட்டத்தில், 3 முதல் 4 வயது முதல் துவங்கும் முதல் நிலையில் 140 பாடத்திட்டங்கள் இருக்கும் இரண்டாவது நிலையில் 4 முதல் 5 அல்லது 5 முதல் 6 வயதில் நிறைவு பெறும். அடுத்தடுத்த புதிய பாடங்கள் பள்ளி கல்வி நிறைவு பெறும் வயதில் 17 முதல் 18 ல் நிறைவு பெறும். உலக அளவில் 20 நிபுணர்கள் கொண்ட குழு, இதை வடிமைத்து மேம்படுத்தியுள்ளது. 

குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம், வழிமுறைகள் குறித்து படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடத்திட்டம் இலங்கை, போட்ஸ்வானா, அர்ஜெண்டினா, கென்யா போன்ற நாடுகளில் முன்மாதிரி அடிப்படையில் கடந்த ஜனவரி 2017 முதல் துவக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2017 முதல் கனடா, இந்தோனேஷியா, மற்றும் நைஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கல்வித் திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை துாதர அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு கொரியா சியோல் நகரில் நடந்த உலக கல்வி மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கி மூன் இது தொடர்பாக அங்கீகாரம் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தற்போது கோவையில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜய்கார்த்திகேயன் மூலம் சமந்தா தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் டி. லக்ஷ்மிநாராயணசாமி புத்தகங்களை பெற்றுக்கொண்டார். தலைமை கல்வி அதிகாரி உமா, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை தலைமை வியாபார அலுவலர் ஸ்வாதி ரோஹித் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...