8 வயது சிறுவனுக்கு ரோபோட்டிக் முறையில் சிகிச்சை செய்து கே.எம்.சி.எச். மருத்துவமனை சாதனை

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் எட்டு வயது சிறுவனுக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள அடைப்பை ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டது. 

சிறுவனின் சிறுநீரகத்திலிருந்து சிறுநீரகப்பைக்கு செல்லும் குழாயில் பிறப்பிலேயே அடைப்பு எற்பட்டு இருந்தது. இதனால், கிட்னியின் செயல் பாதிக்கப்பட்டது. சிறுநீரக பைக்கு அருகில் உள்ள இந்த அடைப்பை நீக்க மருத்துவர் நாக.குமரன் மற்றும் மயக்கவியல் மருத்துவர் என். வினோத்குமார் இருவரும் இணைந்து ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.



இந்த அறுவை சிகிச்சையில் சிறுநீர் குழாயில் உள்ள அடைப்பை நீக்கிய பிறகு மீண்டும் சீறுநீர்பையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு, சிறுநீர் பை நிறைந்தவுடன் பின்னோக்கி செல்லாத வகையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, நுண்ணிய தையல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுண்ணிய தையலை மேற்கொள்ள பல மடங்கு பெரிதுபடுத்திக் காட்டும் ரோபோட்டிக் நுண்ணோக்கியால் மிகவும் துல்லியமாக இந்த அறுவை சிகிச்சையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையால், விரைவாக குணமடைவதுடன் துளையிட்டு மேற்கொள்ளப்படும் லேப்ராஸ்கோபிக் சிகிச்சையின் நன்மைகளும் பெறப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குழந்தைக்கான ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். விரைவில் குணமடைந்த சிறுவனின் குடும்பத்தினர் கே.எம்.சி.எச். நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்தனர்..

சிகிச்சையை குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் மருத்துவர் நல்லகவுண்டர் பழனிசாமி கூறுகையில் ‘‘மிகவும் அதிநவீன டாவின்சி ரோபோட்டிக் அறுவை சிகிச்சை கருவியும், தேர்ந்த மருத்துவர்களும், மருத்துவமனையில் இருப்பதால் இத்தகைய அறுவை சிகிச்சைகளை எளிதாக செய்ய முடிகிறது. இத்தகைய பயனுள்ள கருவி, பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...