குடிநீர் இணைப்பிற்கான கூடுதல் வைப்புத்தொகை செலுத்த நவ.,30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

கோவை மாநகராட்சியில் குடிநீர் இணைப்பிற்கான கூடுதல் வைப்புத்தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் நவம்பர் 30-ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக துணை விதிகளின் படி 01.10.2013 முதல் அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன் இருந்த 72 வார்டுகளில் 01.10.2013க்கு முன்னர் வீட்டு உபயோக குடிநீர் இணைப்பு பெற்ற இணைப்புதாரர்கள் கூடுதல் வைப்புத்தொகையாக ரூ.4000, வீட்டு உபயோகமல்லாத முறை இணைப்புதாரர்கள் ரூ.7000, செலுத்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு அனைத்து குடிநீர் இணைப்புதாரர்களுக்கும் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு 15.09.2017-க்கு முன்னர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 

மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் கூடுதல் வைப்புத் தொகையாக விளாங்குறிச்சி பகுதியில் (வார்டு எண் 32) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.4000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.9000, காளப்பட்டி பகுதியில் (வார்டு எண் 33,34,35 மற்றும் 36) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.5000, வீரகேரளம் பகுதியில் (வார்டு எண் 18 மற்றும் 19) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத இணைப்புகளுக்கு ரூ.5000 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

துடியலூர் பகுதியில் (வார்டு எண் 1,2,3 மற்றும் 4) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.5000, சின்னவேடம்பட்டி பகுதியில் (வார்டு எண் 27 மற்றும் 42) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.5000, சரவணம்பட்டி பகுதியில் (வார்டு எண் 28,29,30 மற்றும் 31) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.5000 மற்றும் வெள்ளக்கிணறு பகுதியில் (வார்டு எண் 26 மற்றும் 43) குடியிருப்பு இணைப்புகளுக்கு ரூ.2000, குடியிருப்பு அல்லாத மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு ரூ.5000 வீதம் மாநகராட்சிக்கு செலுத்தக்கோரி அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

மேற்படி குடிநீர் இணைப்பிற்கான கூடுதல் வைப்புத்தொகை செலுத்த நவம்பர் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும் மற்றும் சனிக்கிழமைகளிலும் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களிலும் இத்தொகையினை செலுத்தலாம். மாநகராட்சி அனைத்து வரிவசூல் மையங்களிலும் எந்த மண்டலத்தைச் சேர்ந்த இணைப்புதாரரும் இத்தொகையினை செலுத்த இயலும். 

மேலும், 01.10.2013-க்கு முன்னர் குடிநீர் இணைப்பு பெற்று அறிவிப்பு கிடைக்கப்பெறாத இணைப்புதாரர்கள் சம்பந்தப்பட்ட வரிவசூல் மையங்களுக்கு குடிநீர் கணக்கெடுப்பு புத்தகத்தை கொண்டு சென்று குடிநீர் இணைப்பு எண்ணின் அடிப்படையில் இத்தொகையினை செலுத்திக்கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குடிநீர் இணைப்பிற்கான கூடுதல் வைப்புத்தொகையினை மாநகராட்சிக்கு தவறாமல் செலுத்தி ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...