பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சமூக பணித் துறை மாணவர்கள் சார்பாக ரத்தினபுரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்றது.



பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் செயல்முறைகள், டெங்கு கொசு உருவாவதை தடுப்பது மற்றும் சுத்தமான சூழலை உருவாக்குவது பற்றிய தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்காக கோவை மாநகராட்சியோடு இணைந்து பாரதியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட சமூக பணித் துறை மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



'மக்களை அச்சுறுத்தி வரும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் போன்ற நோய்கள் தேங்கி நிற்கும் தண்ணீர், அகற்றப்படாத குப்பைகள் போன்ற சுகதாரமற்ற சுற்றுச்சூழல் காரணமாகத் தான் உருவாகிறது. எனவே இதைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். மாநகராட்சி நிர்வாகிகளோடு இணைந்து இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்றார் மாணவி மதுபாலா.



இந்த பிரச்சாரத்தில் டெங்கு விழிப்புணர்வு பற்றிய வீதி நாடகம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகிக்கப் பட்டது. பின் ரத்தினபுரி முதல் பவர் ஹவுஸ் வரை மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.



இந்த நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சியின் நகர் நல அலுவலர் சந்தோஷ் குமார் பங்கேற்றார்.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...