கோவையில் வடகிழக்கு பருவ மழை வரும் சனிக்கிழமை வரை நீடிக்கும்

கோவையில் வரும் சனிக்கிழமை வரை மழை நீடிக்கும் என கோவை வேளாண் பல்கலைக் கழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை இன்று  துவங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர பகுதிகள் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மிதமான மழை பெய்யத் துவங்கியுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை வரை பரவலாக வடகிழக்கு பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக வானிலை ஆய்வு மையத்தின் வானவியல் துறைத் தலைவர் எஸ்.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

"தென்கிழக்கு தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த இரு தினங்களுக்கு கோவையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. 

கடந்த ஆண்டு கோவையில் பருவ மழைக்காலத்தில் 347 மில்லி மீட்டர் மழை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 135 மில்லிமீட்டர் மழையே பெய்தது. இந்த வருடம் 327 முதல் 347 மில்லி மீட்டர் மழை எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். விருதுநகர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையே பெய்யும்". என்றார்.

மேலும், இந்த பருவ மழையின் போது பெறப்படும் நீரினை வீணடிக்காமல் தேக்கி வைத்து விவசாயிகள் பயனடைய வேண்டும். கோவை மாநகராட்சி நிர்வாகம் மாநகரப் பகுதிகளில் வடிகால் குழாய்களை சீரமைத்து வைக்க வேண்டும் எஸ்.பன்னீர் செல்வம் கூறினார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...