கோவையில் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட முயன்ற திமுக-வினர் கைது



கோவையில் நடைபெற்று வரும் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திமுக-வினர் 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை, சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் கடந்த திமுக ஆட்சியின் போது ரயில்வே மேம்பாலம் அமைக்க பணிகள் துவங்கப்பட்டது. ஆனால், அடுத்து ஆட்சியில் அமர்ந்த அதிமுக அரசு மேம்பாலப்பணிகளை கைவிட்டதாக அப்பகுதி மக்களால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.



இந்நிலையில் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மேம்பாலம் உள்ளிட்ட கோவையில் கட்டப்பட்டுவரும் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி திமுக சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக, செஞ்சிலுவை சங்கம் அருகே ஒன்று கூடிய 500-க்கும் மேற்பட்ட திமுக-வினர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டனர். ஆனால், அவர்களை செஞ்சிலுவை சங்கம் அருகிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.



அப்போது, எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் கிடப்பில் போடப்பட்டுள்ள பாலப்பணிகளால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதே போன்று காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்படும் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என திமுக-வினர் வலியுறுத்தினர்.

இதனைத்தொடந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...