அ.தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவினர் சாலை மறியல்

கோவை, மதுக்கரை பகுதியை சேர்ந்த  தி.மு.க. பிரமுகர் மீது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தூண்டுதலின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

நவக்கரை அடுத்த மாவூத்தம்பதி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எட்டிமடை சண்முகத்திற்கும் இடையே கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பிரச்சிணை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை என மதுக்கரை பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதனிடையே, தி.மு.க. பிரமுகரான சதீஷ் தான் அதனை ஒட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து,  சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகத்தின் ஓட்டுநர் சிவகுமார் அளித்த புகாரின் பேரில் மதுக்கரை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில், சரியான ஆதாரம் இல்லாமல் திமுக பிரமுகர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி அக்கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் அல்லது சட்டமன்ற உறுப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதியதன் பேரில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...