சசிகுமார் கொலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாநகர காவல் ஆணையரிடம் மனு

கோவையில் இந்து முன்னணி மாநகர செய்தி தொடர்பாளர் திரு.சசிகுமார் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். 

இது தொடர்பாக, துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தற்போது வரையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், திரு.சசிகுமார் கொலையில் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பரப்படுவதாகவும், அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் அவரது தம்பி திரு.தனபால் (35) இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். 

மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- 

எனது சகோதரர் கொலை செய்யப்பட்டதால் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

இந்த நிலையில், எனது சகோதரர் கொலை பல்வேறு முன்பகைகளின் காரணங்களால் நடைபெற்றது என்றும், எனது குடும்பத்தினரின் கவுரத்தை சீர்குலைக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. 

இதனை தடுத்து, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...