பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இலவச மடிக்கணினி வழங்கினார்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேற்கு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை வழங்கினார். 



ஆண்டுதோறும், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் வகையில், தமிழக அரசின் சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை மேற்கு மண்டலம், வார்டு என் 24 ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேற்கு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2016-2017-ம் ஆண்டு மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று (அக்.,27) நடைபெற்றது. 

இதில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். 



இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் திரு.டி.என்.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க. விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் திருமதி.ப. காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...