காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் நவ.,1-ம் தேதி திறக்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு


கோயம்புத்தூர், அக். 28: கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் நவம்பர் 1 ம் தேதி திறக்கப்படும் எனவும் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார் எனவும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை விமான நிலைய விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நில நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு  இருப்பதாகவும் அவர்தெரிவித்தார்.

கோவை விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.அமைச்சர்  வேலுமணி,தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,கோவை மாவட்ட ஆட்சியர்,கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் விமானநிலையஆணைய அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு பின்னர்  அமைச்சர் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நில நிர்வாக  குழு ஆணையர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாகவும்,நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பணிகளை விரைவாக அந்த குழு மேற்கொள்ளும் என தெரிவித்தார்.விமான நிலையம் மேம்படுத்தப்பட்டால் கோவை,திருப்பூர் மாவட்டங்கள் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்தவர்,விமான நிலைய விரிவாக்கத்திற்காக பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு  அவர்களுக்கு உரிய தொகை கிடைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் நவம்பர் 1 ம் தேதி திறக்கப்படும் எனவும் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார் எனவும் படிப்படியாக மெட்ரோ ரயில் பாலங்கள் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...