மெர்சல் பட பாணியில் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு மாற்றும் தரகர் சிக்கினார்


கோவை, அக்டோபர். 28: கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை ஆதாய நோக்கில் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முயன்ற இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர். 

பொள்ளாச்சி பகுதிய சேர்ந்தவர் வேலுச்சாமி. அவரது மகன் சந்திரசேகர்(40).. விபத்து ஒன்றில் சிக்கிய இவர் நேற்று காலை 11 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு பொள்ளாச்சியை சேர்ந்த ஜான் என்ற முருகன் (47) என்பவர் வந்தார். மேலும் சந்திரசேகரிடம், வழக்கு நடத்தி காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் பணம் பெற்று தருவதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்றும் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், இதை சந்திரசேகர் மறுத்ததோடு, அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அங்கு பணியில் இருந்த ரமேஷ்ராஜா என்ற மருத்துவருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் ஜான்-ஐ அணுகி, 'எதற்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முயற்சி செய்கிறீர்கள்?' என்று கேட்டுள்ளார். அதற்கு, தனக்கு பின்னால் பெரிய அதிகாரிகள் இருப்பதாகவும், பகைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவரை ஜான் மிரட்டியுள்ளார். தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் ரமேஷ்ராஜா பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜான்-ஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கில், வழக்கறிஞர்கள், மற்றும் காவல்துறையில் பணியாற்றும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், கைது செய்யப்பட்டவரிடம் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர் போலீசார். 

சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் பணத்திற்காக அரசு மருத்துவமனை செல்லும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் தரகர்கள் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதற்கு தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதே பாணியில் சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...