சுகாதாரச் சீர்கேட்டில் வார்டு எண்.22

ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள வார்டு எண்.22 க்குட்பட்ட காமராஜபுரம், நியூ ஸ்கீம் சாலை, குப்பை மற்றும் கழிவுகளால் நிரம்பிவழிகின்றது. மேலும், இப்பகுதியை அடுத்துள்ள தடாகம் லிங்க் சாலை சந்திப்பில், சாக்கடைக் கழிவுகள் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கித் தவித்து வருகின்றனர்.



சுமார் இருநூறு குடும்பங்கள் வசித்து வரும் காமராஜபுரத்தில் வெறும் இரண்டு குப்பைத் தொட்டிகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பைத் தொட்டிகள் சீக்கிரமாக நிரம்பி விடுவதால் கழிவுகள் குப்பைத் தொட்டியின் அருகில் கொட்டப்படுகின்றன. அந்த குப்பைகள் மழைநீரால் அடித்துச்செல்லப்பட்டு சாலைகளில் தேங்கி, சுகாதாரமற்ற சூழலை உருவாக்கி வருகின்றன.



'மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து இப்பகுதியை சுத்தம் செய்து வருகின்றனர். ஆனாலும், குப்பைகள் தேங்குவதற்கு காரணம் குப்பைத் தொட்டிப் பற்றாக்குறை. குப்பைத் தொட்டிகள் குடியிருப்பு வாசிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டால் குப்பைகள் சாலைகளுக்கு வர வாய்ப்பில்லை. மேலும், இப்பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வாகனத்தை குப்பைத் தொட்டிக்கு மிக அருகில் உள்ள பொது இடத்தில் நிறுத்துவதோடு, அலட்சியமாக அதே இடத்தில் குப்பைகளையும், மது பாட்டில்களையும் வீசிச் செல்கின்றனர். இதனால் இந்த இடமே பெரும் குப்பை மேடாக மாறிவருகின்றது. முறையான அனுமதியில்லாமல் நிற்கும் வாகனங்களை அகற்றி, பொது இடத்தில் குப்பைகளை வீசுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார் இப்பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர்.



காமராஜபுரத்தை ஒட்டியுள்ள மேட்டுபாளையம் சாலையில் அமைந்துள்ளது தடாகம் லிங்க் சாலை சந்திப்பு. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் இந்த சாலையில் உள்ள சாக்கடைகள் நிரம்பி, சாக்கடைக் கழிவுகள் சாலையில் தேங்கி, வாகன ஓட்டிகளையும் குடியிருப்பு வாசிகளையும் முகம் சுளிக்க வைக்கிறது. இதுகுறித்து புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என வருத்தப்படுகிறார்கள் இப்பகுதி மக்கள்.



சுமார் 24 வருடங்களாக இப்பகுதியில் வசிக்கும் திரு. K. சுவாமியப்பன் கூறியதாவது, 'சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதால், மழை நாட்களில் நரகத்தில் இருப்பதைப் போல் இங்குள்ளவர்கள் உணர்கின்றனர். இடையர்பாளையத்திலிருந்து கொண்டு செல்லப்படும் கழிவு நீர் குழாயின் கொள்ளளவும், அதன் அமைப்பும் முறையாக திட்டமிடப்படாமல் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியிலிருந்து கழிவு நீர் வெளியேற முடியாமல், பின்னோக்கி வந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடுகிறது. இதைத்தவிர கழிவு நீர் குழாயில் ஏற்படும் அடைப்புகள் சாதாரண நாட்களிலும் பெரும் சிரமத்தை உருவாக்குகிறது. இந்நிலை தொடர்ந்தால் இங்கு வசிக்கும் மக்களுக்கு உயிரைக்கொல்லும் நோய் தொற்றுகள் உருவாக வாய்ப்புள்ளதாக' எச்சரித்தார்.

மேலும், தடாகம் லிங்க் சாலை சந்திப்பில் 20 அடி ஆழமுள்ள குழி ஒன்று, மூடப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சென்ற வாரம், இந்த குழியில் தவறி விழுந்த 10 வயது சிறுவனை இப்பகுதி மக்கள் மீட்டு, பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.



தூய்மை பாரதம், ஸ்மார்ட் சிட்டி, டெங்கு ஒழிப்பு போன்ற பணிகளுக்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் கட்டமைப்புகளையும் ஆய்வு செய்து, இப்பகுதி மக்களுக்கு சுகாதாரமான சுழலை உருவாக்கித்தர வேண்டும்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...