மனித கழிவுகளை ஓடையில் கலக்கவிட்ட குன்னூர் அரசு மருத்துவமனையினைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

மனிதக் கழிவுகளை பம்பு செட் மூலம் ஓடையில் கலக்கவிட்ட குன்னூர் அரசு மருத்துவமனையினை பொதுமக்கள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் கழிவுகளை லாரிகள் மூலம் அகற்றுவதாக மருத்துவர் உறுதியளித்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை நிர்வாகம், செப்டிக் டேங்கில் உள்ள மனித கழிவுகளை பம்பு செட் மூலம் குன்னூர் கிருஷ்ணாபுரம் உமரிகாட்டேஜ் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மார்க்கெட் வழியாக இரவு நேரத்தில் ஓடையில் கலக்கவிடுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் முபாரக், நகரச் செயலாளர் இராமசாமி ஆகியோர் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தலைமை மருத்துவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், முறையாக கழிவுகளை லாரிகள் மூலமாக அகற்றுவதாக மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பம்புசெட்டு அகற்றப்பட்டது. பின், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...