ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விக்கப்படும் : போலீசார் அறிவிப்பு

கோவை, அக்டோபர்.30: கோவை மாநகர 23-வது வார்டுக்கு உட்பட்ட  ஆர்.எஸ்.புரம்  பகுதியில் கோவை மாநகர போலீசார் ஒரு புறம் மட்டும் வாகனங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். 



இதற்காக அந்த பகுதிக்குட்பட்ட பொன்னுரங்கம்  சாலை, வெங்கடசாமி சாலை, பெரியசாமி சாலை மற்றும் பாஷ்யகர்லோ சாலை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளின் ஒருபுறம் 'நோ பார்க்கிங்' பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த விதியை மீறி வாகனங்களை இருபுறமும் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 



இது தொடர்பாக, போலீசார் வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :- 

ஆர்.எஸ்.புரம் 23-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் வரும் 1.11.2017 முதல் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தக்கூடாது. அத்துமீறி வாகனங்கள் நிறுத்துவோருக்கு ரூ.100 (177 Motor Vehicle Act) அல்லது ரூ.500 (179 Motor Vehicle Act) அபராத தொகை வசூலிக்கப்படும்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக யாரேனும் வாகனங்களை நிறுத்தினால் 23-வது வார்டு குடியிருப்பு வாசிகள் 8190000100 என்ற வாட்சாப் எண்ணுக்கு புகார்களை அனுப்பலாம். 



Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...