ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஈஎம்ஐ திட்டம் அறிமுகம்

கோவை, நவம்பர் 1: கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நோயாளிகளின் சிகிச்சைக்கான எளிய ஈஎம்ஐ திட்டம் காபிடல் ஃப்லோட் நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்த அறிமுக நிகழ்ச்சியில் முதன்மை இயக்க அதிகாரி திரு.வி.ராமகிருஷ்ணா பேசுகையில், இந்தத் திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 3 லட்சம் வரை பணம் கடனாக வட்டி இல்லாமல் வழங்கப்படும். இது ஒரு லாப நோக்கமற்று செயல்படுத்தப்பட்டுள்ளது. கடன் பெற விண்ணப்பம் ஆய்வு கட்டணங்களோ வேறு செலவுகளோ எதுவும் இல்லை. மருத்துவமனைக்கோ அல்லது கடன்பெறவோ முன்பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்றார்.

இதனைத்தொடர்ந்து, காபிடல் ஃப்லோட் கோவை கிளை மேலாளர் திரு. மணிகண்டன் பேசுகையில், முன்பணம் எதுவும் இல்லாமல் வட்டி இன்றி ஆவண கட்டணமின்றி இந்தத் திட்டத்தினை துவங்கியிருப்பது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒன்பது மாதங்கள் மற்றும் பன்னிரண்டு மாதங்கள் என்ற எளிதான சுலப தவனை முறையில் இந்தக் கடன் வசதி வழங்கப்படுகிறது.



நோயாளிகளும், ரத்த உறவுகளும் இந்தக் கடனுக்காக அவர்களது ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வங்கி விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் 70 சதவிகிதம் நோயாளிகள் தங்கள் மருத்துவ செலவுகளை உடனடியாக பெற முடியும். கோவை மக்களின் நலனுக்காக எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் மற்றொரு சமூக சேவை முயற்சியாக இது கருதப்படுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் மருத்துவர் திரு. பி.சுகுமாரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...