ரூ. 900 கோடி செலவில் உப்பிலிபாளையம் முதல் மருத்துவக்கல்லூரி வரை மேம்பாலம்: முதலமைச்சர் அறிவிப்பு


கோவை, நவம்பர் 1 : கோவையில் 900 கோடி மதிப்பீட்டில் உப்பிலிபாளையத்தில் இருந்து மருத்துவகல்லூரி வரை புதிய மேம்பாலம் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

காந்திபுரத்தில் ரூ.195 கோடி மதி்ப்பீட்டில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. அதில் பார்க்கேட் முதல் லட்சுமிபுரம் வரையிலான 1,752 மீட்டர் தூரம் கொண்ட முதல் அடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை  இன்று மாலை திறந்து வைத்தார். 



புதிய பாலம் அருகில் அமைக்கப்பட்ட மேடையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன்  மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். முதல் அடுக்கு மேம்பால கல்வெட்டு, குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கான கல்வெட்டினை முதலமைச்சர் திறந்து வைத்தார். 

ரூ.120 கோடியில் முதல் கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில், பாலத்தின் இரண்டாம் அடுக்கும் விரைவில் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்.என்று   முதலமைச்சர்  அறிவித்தார்.



மேலும், ரூ.121 கோடியில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலபணிகள் விரைவில் துவங்கும். அதேபோல, உப்பிலிபாளையத்தில் இருந்து மருத்துவகல்லூரி வரை 9 கீ.மீ தூரம் வரை ரூ.900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்படும்.

மேற்கு புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க பட்டு வருகின்றது. பாலங்கள், புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்ட பின் போக்குவரத்து நெரிசல் குறையும். கோவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். கோவை மாவட்டம் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக திகழ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார். 



இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி பேசுகையில், 24 மணி நேரமும் செயல்படும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகின்றார். அவினாசி அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட கொங்கு மண்டல மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். எதிர்கட்சிகளின் எந்த விமர்சனமும் தங்களிடம் எடுபடாது, என்றார். 

நிகழ்ச்சிக்கு பின்னர் புதிய மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த முதலமைச்சர், பாலத்தின் வழியாக சிறிது தூரம் பயணம் செய்தார்.



Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...