அனைத்து உணவு வணிகர்களும் டிச.31-க்குள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்- ஆட்சியர்


கோவை, டிசம்பர் 13

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து உணவு வணிகர்களும் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் கட்டாயம் உரிமம் அல்லது பதிவு செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006ன் கீழ் உணவு பொருள் வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் மற்றும் பதிவுகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி உணவு பொருள் தயாரிப்பவர்கள், இருப்பு வைப்பவர்கள், விநியோகம் செய்வோர், உணவு விடுதிகள், ஓட்டல், பேக்கரிகள், தள்ளு வண்டிகள் உள்ளிட்ட உணவு விநியோகிக்கும் வாகனங்கள், இறைச்சி கடைகள் உணவு கையாளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் உரிமம் மற்றும் பதிவு செய்தல் வேண்டும்.

வருடாந்திர வியாபாரம் ரூ.12 லட்சத்திற்கு கீழ் வியாபாரம் செய்வோர் ரூ.100 செலுத்தி அந்தந்த பகுதியில் உள்ள பொது சேவை மையங்களின் மூலம் பதிவு செய்து உடனடியாக சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். ரூ.12 லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்யும் தயாரிப்பாளர் தவிர பிற வியாபாரிகளுக்கு ரூ.2000 கட்டணமாகும். தயாரிப்பாளர்களுக்கு ரூ.3000 மற்றும் ரூ.5000 தயாரிப்பு அளவைப் பொறுத்து கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்களை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் அலுவலகத்தில் நேரடியாக தொடர்பு கொண்டும், மாவட்ட நியமன அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம். அல்லது, www.fssai.gov.in என்ற இணையதளத்திலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

பொதுமக்கள், உணவுப் பொருள் விற்பனை சம்பந்தமான புகார்களுக்கு 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், [email protected] என்ற இ-மெயில் வழியாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...