நீதிமன்றம் உத்தரவிட்டும் கைதியை விடுதலை செய்ய மறுப்பு : சிறை நிர்வாகம் மீது உறவினர்கள் புகார்

கோவை, டிசம்பர் 21

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவை குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி ஜப்ருவை சிறை நிர்வாகம் விடுதலை செய்ய மறுப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜப்ரு என்கிற சையத் ஜாபர் அகமது, கடந்த 2009-ம் ஆண்டு அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், மதுரை மாவட்டத்தில் ஜெயபிரகாஷ் என்பவர் கொலை வழக்கில் ஜப்ரு ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், ஜப்ருவை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சகோதரி பவிதா சுல்தானா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அவரை விடுதலை செய்ய சிறை நிர்வாகம் மறுப்பதாக அவரது வழக்கறிஞர் பா.பா.மோகன் தெரிவித்தார். ஜப்ருவை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டுமெனவும், இல்லையெனில் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...