நீதிமன்றம் உத்தரவிட்டும் கைதியை விடுதலை செய்ய மறுப்பு : சிறை நிர்வாகம் மீது உறவினர்கள் புகார்

கோவை, டிசம்பர் 21

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவை குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி ஜப்ருவை சிறை நிர்வாகம் விடுதலை செய்ய மறுப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜப்ரு என்கிற சையத் ஜாபர் அகமது, கடந்த 2009-ம் ஆண்டு அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், மதுரை மாவட்டத்தில் ஜெயபிரகாஷ் என்பவர் கொலை வழக்கில் ஜப்ரு ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், ஜப்ருவை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சகோதரி பவிதா சுல்தானா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அவரை விடுதலை செய்ய சிறை நிர்வாகம் மறுப்பதாக அவரது வழக்கறிஞர் பா.பா.மோகன் தெரிவித்தார். ஜப்ருவை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டுமெனவும், இல்லையெனில் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...