கோவை மத்திய சிறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, டிசம்பர் 21

கோவை மாவட்ட மத்திய சிறையின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகச் சிறை கண்காணிப்பாளர் எம். செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், கோவை மத்திய சிறையில் பல்வேறு பிரிவில் காலிபணியிடங்கள் உள்ளன. உற்பத்தி பிரிவில் காலியாக உள்ள மின்கம்பியாளர் 2 காலிபணியிடங்களும், நெசவு பணியாளர் 1 காலிபணியிடமும், நெசவியல் வல்லுநர் 1 காலிபணியிடமும், தையல் போதகர் 2  காலிபணியிடங்கள் என மொத்தம் 6 காலிபணியிடங்கள் நிரப்பவதற்கு நேர்காணல் நடைபெறவுள்ளது. மின் கம்பியாளர் பணியிடத்திற்குப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள், இதர வகுப்பைச் சார்ந்தவர்களும், தையல் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் அருந்ததியினர், இதர வகுப்பைச் சேர்ந்தவர்களும், நெசவு பணியாளர், நெசவியல் வல்லுநர் பணியிடத்திற்கு அனைத்துப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். 

நெசவியல் வல்லுநர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக ஜனவரி 8-ம் தேதியன்றும், நெசவுப் பணியாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக ஜனவரி 9-ம் தேதியும், தையல் போதகர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக 11-ம் தேதியும், மின்கம்பியாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக 12-ம் தேதி என அனைத்து காலிப் பணியிடங்களுக்கும் அந்தந்த நாட்களில் காலை 11 மணியளவிலும் நேர்காணல் நடைபெறவுள்ளது. 

இந்த நேர்காணலில் கல்வித் தகுதி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், தொழிற்கல்வி சான்றிதழ், முன்அனுபவம் சான்றிதழ் மற்றும் முன்னுரிமைச் சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு மேற்கண்ட நாட்களில், கோவை மத்திய சிறைகண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெறும். இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...