வடமாநில பெற்றோரால் கொடுமைப்படுத்தப்பட்ட இரு சிறுவர்கள்

திருப்பூர், டிசம்பர் 21

திருப்பூரில் வடமாநில பெற்றோரால் கொடுமைப்படுத்தப்பட்ட இரு சிறுவர்கள் காவல்துறையால் மீட்பு. தலைமறைவான பெற்றோர் குறித்து போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் . இந்நிலையில் திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிபாளையத்தில் சில நாட்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் இரு குழந்தைகளுடன் குடிபுகுந்துள்ளனர் . 

அந்த தம்பதி வந்ததில் இருந்தே குழந்தைகளை கொடுமைபடுத்தியுள்ளனர் . இந்நிலையில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர் . அப்போது அவர்களது 4 வயது மகனின் உடலில் சூடு வைத்துள்ளனர்  இது குறித்து காவல்துறையினருக்கு தெரிவிப்பதாக அக்கம்பக்கதினர் கூறியதையடுத்து தம்பதியினர் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறை 4 வயதுடைய சிறுவன் மற்றும் இரண்டரை வயதுடைய சிறுமியை மீட்டு சிகிச்சையளித்து அனுப்பர்பாளையத்தில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனர் .

 மேலும் தலைமறைவான   சிறுவர்களின் பெற்றோர்களன மணோஜ்-பிஜிலு தம்பதியினரை போலிசார் தேடி வருகின்றனர் .

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...