முதலமைச்சரின் சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை மாற்றம் செய்த விவகாரம் : ஒருவர் கைது

டிசம்பர் 23

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சட்டைப்பையில் வைத்திருந்த ஜெயலலிதா படத்தை மாற்றி, பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பதைப் போல சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஒகி’ புயல் பாதிப்புகளை பார்வையிட சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அதிகாரிகள் வரவேற்றனர். இது தொடர்பான படங்கள் ‘வாட்ஸ்–அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன.

பிரதமரை வரவேற்றபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சட்டைப்பையில் முன்னாள் முதலமைச்சரின் ஜெயலலிதா உருவப்படத்தை வைத்திருந்தார். அந்தப் படத்தை வெளியில் இருந்து பார்த்தாலும் ஜெயலலிதா உருவம் தெரிந்தது.

இந்த நிலையில், அந்தப் படத்தில் ஜெயலலிதா உருவத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக பிரதமர் மோடியின் படத்தை இடம்பெறச்செய்து சமூக வலைத்தளங்களில் வி‌ஷமத்தனமாக வெளியிடப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரான கனகராஜ் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டி என்பவரைக் கைது செய்தனர். அலெக்ஸ்பாண்டி, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...