50 மி.கி. அளவில் இயேசு சிலைகளை உருவாக்கி கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்ற தங்க நகைத்தொழிலாளி

கோவை, டிசம்பர் 23

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இயேசு சிலைகளை 50 மில்லி கிராமில் உருவாக்கிய தங்க நகைத்தொழிலாளியின் படைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழா நாளை மறுநாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தங்க நகைப்பட்டறை தொழிலாளி யுஎம்டி ராஜா என்பவர் உலகிலேயே மிகச்சிறியதும், தங்கத்தினால் ஆன நான்கு இயேசுவின் சிலைகளை 50 மில்லி கிராமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



தங்க நகைப்பட்டறை தொழிலாளியாக இருந்து கொண்டு பலவிதமான நிகழ்வுகளை, யுஎம்டி ராஜா தனது கலைத்திறமையால் படைத்து வருகிறார்.

மேலும், மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் பண்டிகை நாட்களைக் குறிப்பிடும் விதமான படைப்புகளை உருவாக்கும் அவர், பொங்கலின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார். இதேபோல, சிறிய அளவிலான உலகக்கோப்பை, எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்ஜிஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவங்களைத் தங்கத்தில் அவர் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...