50 மி.கி. அளவில் இயேசு சிலைகளை உருவாக்கி கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்ற தங்க நகைத்தொழிலாளி

கோவை, டிசம்பர் 23

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இயேசு சிலைகளை 50 மில்லி கிராமில் உருவாக்கிய தங்க நகைத்தொழிலாளியின் படைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழா நாளை மறுநாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தங்க நகைப்பட்டறை தொழிலாளி யுஎம்டி ராஜா என்பவர் உலகிலேயே மிகச்சிறியதும், தங்கத்தினால் ஆன நான்கு இயேசுவின் சிலைகளை 50 மில்லி கிராமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



தங்க நகைப்பட்டறை தொழிலாளியாக இருந்து கொண்டு பலவிதமான நிகழ்வுகளை, யுஎம்டி ராஜா தனது கலைத்திறமையால் படைத்து வருகிறார்.

மேலும், மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் பண்டிகை நாட்களைக் குறிப்பிடும் விதமான படைப்புகளை உருவாக்கும் அவர், பொங்கலின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார். இதேபோல, சிறிய அளவிலான உலகக்கோப்பை, எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்ஜிஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவங்களைத் தங்கத்தில் அவர் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...