தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

டிசம்பர் 23

திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பூரில், பிற மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கும்பணிகள் ஜீன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா நகரில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குழந்தைகளின் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சமுதாயக் கூடத்தில் 22.12.2017 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் யு.புளோரா தலைமை வகித்தார். 

நிகழ்ச்சியில், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் பேசும் போது, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்கள் கல்வி கற்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் 31 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு பயிற்சி மையத்தின் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இக்குழந்தைகளுக்குத் தமிழக அரசின் மூலம் பாடப்புத்தகம், விளையாட்டு உபகரணங்கள், எழுதுபொருட்கள், மதிய உணவு, சீருடை, காலணி உள்ளிட்ட இலவச கற்றல் உபகரணங்கள் கல்வித்துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று, சமூக நலத்துறையின் சார்பில் முட்டையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்படுகிறது. வடமாநில குழந்தைத் தொழிலாளர்களுக்கு ஆதார் மையங்களில் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆதார் அட்டை பெற்றுத் தருவதோடு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்கி மாணவ, மாணவிகளின் வருகை 60 சதவீதம் இருக்கும்பட்சத்தில் மாதம் ரூ.400 ஊக்கத்தொகையாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வங்கி கணக்கிற்கு நேரடி பணபரிமாற்ற திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும், குழந்தைத் தொழிலாளர்களின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் துவங்கி சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும் வழிகாட்டப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குப் பெற்றோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் யு.புளோரா பரிசுகள் வழங்கினார். முடிவில் பாரதியார் பல்கலைக்கழக சமூக பணிஇயல் துறை முதலாம் ஆண்டு மாணவர் மதன்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...