பனிச்சரிவில் சிக்கி பலியான ராணுவ வீரரின் உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அஞ்சலி

கோவை, டிசம்பர் 23

ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கோவை விமான நிலையத்தில் இருந்து அவரது சொந்த ஊரான நாதிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



இந்திய ராணுவத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் படை வீரராக பணியாற்றி வந்தவர் மூர்த்தி (33). திருமணமான இவருக்கு சுபிக்‌ஷன் (3) மெர்வின் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூர்த்தி அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக மூர்த்தி-யின் உடலை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. கடந்த 19-ம் தேதி அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மூர்த்தியின் உடலை அவரது சொந்த ஊரான கரூரை அடுத்த நாதிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முப்படை வீரர்களும் அவரது உடலுக்கு மரியாதை செய்தனர்.



தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் உடல் சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மூர்த்தியின் உடல் சாலை மார்க்கமாக அவரது ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை முழுவதும் வைக்கப்பட்டு, மாலை ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது" என்றார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...