நாட்டின் முதல் குளிர்சாதன புறநகர் ரயில் சேவை மும்பையில் இன்று தொடக்கம்

டிசம்பர் 25

இந்தியாவில் முதன் முறையாக ஏசி வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் புறநகர் ரயில் சேவை மும்பையில் இன்று தொடங்கப்பட்டது.

சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் இருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு சாதாரண மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தடங்களில் ஏசி ரயில்களையும் இயக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதன் முதற்கட்டமாக ஏசி வசதி கொண்ட மின்சார ரயில்கள் மும்பையின் சர்ச்கேட் - பொரிவ்லி இடையே இன்று அறிமுகம் செய்யப்பட்டது. குளிர்சாதன வசதி மற்றும் தானியங்கி கதவுகள் கொண்ட 12 பெட்டிகளுடன் இந்தப் புறநகர் ரயில் இயக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சென்னை, கொல்கத்தா, செகந்திராபாத் போன்ற நகரங்களுக்கும் இந்த ‘ஏசி’ வசதி கொண்ட புறநகர் ரெயில்களை விரைவில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ‘ஏசி’ ரயில்கள் இயக்கப்பட்டாலும், பழைய ரயில்களும் வழக்கம் போல இயக்கப்படும் என்று தெரிவித்துள்ள ரயில்வே துறை, இரண்டுக்குமான டிக்கெட் விலையில் மாற்றம் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

மும்பையில் இன்று தொடங்கப்பட்டுள்ள ‘ஏசி’ வசதி கொண்ட புறநகர் ரெயில்கள் சென்னையில் இயங்கி வரும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...