ஆர்.கே. நகர் மக்களுக்கும், வாழ்த்து கூறியவர்களுக்கும் எம்எல்ஏ தினகரன் நன்றி

டிசம்பர் 25

தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கும், தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கும் டிடிவி தினகரன் நன்றி தெரிவித்தார். 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருக்கு எம்எல்ஏக்கள் பலர் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.  நேற்று தினகரன் வீட்டுக்குச் சென்ற வேலூர் எம்.பி. செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனுக்கு நடிகர் விஷால், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,  கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கும் எம்எல்ஏ டிடிவி தினகரன் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் எனக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெற வைத்த எனது அன்புக்குரிய ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கும், எனது வெற்றிக்காக இரவு பகல் பாராது அயராது பாடுபட்ட பாசமிகு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், தோழமைகளுக்கும் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...