ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஸ்டாலின் விளக்கம்


டிசம்பர் 26

வாக்குக்கு பணம் கொடுப்பதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டின் காரணமாகவே, ஆர்.கே. நகரில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்ததாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் சக்தி திமுகவுக்கு மட்டுமே உள்ளது. திமுகவின் தனித்தன்மையுடனும், தன்மானத்துடனும் உரசிப் பார்க்க வேண்டாம். களத்தில் தோற்றால் விருதாகவும், தோற்றால் விழுப்புண்ணாகவும் கருதும் பக்குவம் திமுகவுக்கு உள்ளது. ஊழல் கடலில் மூழ்கி கொண்டிருப்போர் மூலம் ஆட்சி மாற்றம் வரும் என கருதுவது பகல் கனவு. ஊழல்வாதிகளால் நல்லாட்சி வரும் என கருதுவது கற்பனையின் உச்சகட்டம்.

திமுகவை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் விஷம பிரச்சாரத்தை நிறுத்தி கொள்ள வேண்டும். பணநாயகத்திற்கு பலி கடா ஆகிவிட்டது ஆர்.கே. நகர். இதை மறைத்துவிட்டு விஷம பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அவதூறு பரப்புவோர் ஏமாறுவது நிச்சயம். புது உத்வேகத்துடன் திமுக செயல்பாடு தொடரும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...