இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் ஜெய்ராம் தாகூர்

டிசம்பர் 27

இமாச்சல பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இமாச்சல பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 66 தொகுதிகளில் 44 தொகுதிகளை பாஜக வென்றது. 21 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக முதலமைச்சர் வேட்பாளர் தூமல் தேர்தலில் தோல்வியடைந்ததால், புதிய முதலமைச்சராக மூத்த தலைவர் ஜெய்ராம் தாகூர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இமாச்சல பிரதேச முதலமைச்சராக அவர் இன்று ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மத்திய அமைச்சர்கள், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக மூத்த தலைவர் அத்வானி, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தாகூருடன் எத்தனை அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர் என்ற தகவல் வெளியிடப்பட்டது. 

அமைச்சர்கள் பட்டியல் விவரம் பின்வருமாறு:

சுரேஷ் பரத்வாஜ், ராஜீவ் பிண்டால், ராஜீவ் சேஜல், கோவிந்த் தாகூர், மகேந்தர் சிங், அனில் சர்மா, கிஷன் கபூர், விபின் பார்மர், சர்வீன் சௌத்ரி, விரேந்தர் கன்வார், ராம் லால் மார்கண்டே, விக்ரம் ஜெய்யால், ராஜேந்தர் கார்க், கமலேஷ் குமாரி, இண்டர் சிங் பால்வீர் வர்மா, விக்ரம் தாகூர். சபாநாயகராக ரமேஷ் தவால்லாம், துணை சபாநாயகராக ஹன்ஸ் ராஜ் ஆகிய பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் சட்டசபைக்கு 5-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக அமையப் பெற்ற பாஜக அரசில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2006 முதல் 2009 வரை பாஜக மாநில குழுத் தலைவராக பதவி வகித்துள்ளார். 2007 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் பாஜக மாநிலத் தலைவராக பதவி வகித்துள்ளார். 

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...