பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுலா மற்றும் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்ட சுற்றுலா மற்றும் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 29

கோவை மாவட்ட சுற்றுலா மற்றும் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.



அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய, மாநில அரசுகளால் சுமத்தப்படும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற சட்டங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதிகாரிகளும் தங்கள் மீது உள்நோக்கத்துடன் இடையூறு செய்து வருகின்றனர். 

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாக தொழில் செய்ய முடியாமல் குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை, வாரத்திற்கு 48 மணி நேரம் பணி என்ற சட்டத்திருத்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். வாகன சோதனையின் போது அசல் ஓட்டுநர் உரிமத்தைப் பறித்து வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். சுற்றுலா வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகள் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக முதலமைச்சர், அரசு போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையருக்கு அனுப்ப உள்ளதாகவும் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...