வால்பாறை பகுதியில் சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு பலி

வால்பாறையை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் தோட்ட தொழிலாளியின் கால்நடையை சிறுத்தைப் புலி தாக்கிக் கொன்றது.


வால்பாறை: வால்பாறையை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் தோட்ட தொழிலாளியின் கால்நடையை சிறுத்தைப் புலி தாக்கிக் கொன்றது.

வால்பாறை அடுத்துள்ள கருமலை எல்டி டிவிசனில் தேயிலை தோட்ட தொழிலாளி விஜயகுமாரி என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவர், வளர்த்து வந்த நான்கரை வயது மதிக்கத்தக்க பசுமாடு பீல்டு எண் 14-ல் மேய்ந்து கொண்டிருக்கும் போது தேயிலைச் செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு உயிரிழந்தது.

மேலும், அந்த சிறுத்தைப்புலி தொடர்ந்து கருமலை எஸ்டேட் பகுதியில் மாலை மற்றும் பகல் நேரங்களில் சுற்றித்திரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்துப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...