சான்றிதழ் வழங்க மருத்துவர்கள் அலைக்கழிப்பு : ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல்

மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்க மருத்துவர்கள் அலைக்கழிப்பதாகக் கூறி திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்க மருத்துவர்கள் அலைக்கழிப்பதாகக் கூறி திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.



மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான அரசு உதவிகளைப் பெற மருத்துவ சான்றிதழ் அவசியமாகும். திருப்பூர் அரசு மருத்துவமனையில் தமிழக அரசு வழங்கும் மானிய விலையிலான இருசக்கர வாகனம் உள்ளிட்ட அரசு உதவி பெறும் திட்டங்களுக்கான மருத்துவ சான்றிதழ் பெற வந்திருந்த மாற்றுத்திறனாளிகளை அதிகாரிகள் நீண்ட நேரமாக அலைக்கழித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள், சான்றிதழ் வாங்க வரும் ஒவ்வொரு முறையும் இதேபோன்று அலைக்கழிப்பதாகக் கூறி, அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 



இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாற்றுத்திறனாளிகளிடம் சமரசம் பேசி மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் நாளை சான்றிதழ் வழங்குவதாக உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...