வடமாநில கொள்ளையர்களை கோவை போலீஸார் கைது செய்தது எப்படி..? மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம்

கோவை அருகே பெண்ணை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி விளக்கியுள்ளார்.

கோவை: கோவை அருகே பெண்ணை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி விளக்கியுள்ளார். 

அன்னூர் அருகே உள்ள கனுவக்கரையில் கடந்த 26-ம் தேதி ராஜாமணி என்பவரை கொலை செய்த வடமாநில இளைஞர்கள், அவரது கணவர் மயில்சாமிக்கு மின்சாரம் கொடுத்து கொலை செய்ய முயன்றனர். பின்னர், வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ஒரு லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, அன்னூர் போலீஸார் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மேற்குவங்கம் சென்றனர். கொள்ளையர்கள் சாம்ராடசகா, பிண்டு மாலிக், அஜய்ராய் ஆகியோரை அம்மாநில போலீசார் உதவியுடன் கைது செய்தனர். 

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, பெண்ணைக் கொலை செய்த இளைஞர்கள் இருசக்கர வாகனம் மூலம் திருப்பூர் சென்றனர். அங்கிருந்து சொந்த ஊரான மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றனர். அவர்களின் ஒரு செல்போன் எண்ணை வைத்து மேற்குவங்கம் சென்ற தனிப்படை போலீசார், அம்மாநில போலீசார் உதவியுடன் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை விமானம் மூலம் அழைத்து வந்தனர்.

இவர்கள், மூன்று பேர் மீதும் கோவை மாவட்டத்தில் வேறு குற்ற வழக்குகள் இல்லை, வேறு எங்காவது உள்ளதா..? என விசாரணை நடைபெற்று வருகிறது. வட மாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்துபவர்கள் அவர்கள் குறித்து முழு விபரங்களையும் வைத்திருக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, மேற்குவங்கம் சென்ற தனிப்படை போலீஸார் தேவையான ஆயுதங்களுடன் சென்றதாகவும், அம்மாநில போலிசாருடன் இணைந்து செயல்பட்டதால் குற்றவாளிகளை பிடிக்க முடிந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்தார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...