திருப்பூரில் ஜல்லிக்கட்டு விழாவுக்கான வாடிவாசல் கால்கோல் நாட்டினார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூரில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு வாடிவாசல் கால்கோல் நடும் விழாவினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு வாடிவாசல் கால்கோல் நடும் விழாவினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர் அலகுமலையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு வருகிற பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாடிவாசல் கால்கோல் நடும் விழாவினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.



தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் அலங்காநல்லூர், பாலமேடு, காங்கேயம், வெள்ளகோவில், தம்மம்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் 1000-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற உள்ளது". 

இதற்காக தற்போதே 500-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதில், அனுபவம் வாய்ந்த மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் வழிகாட்டுதலுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். காளைகளை முறையாகப் பரிசோதிக்க 18 கால்நடை மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்." என்று அவர் கூறினார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...