தள்ளுவண்டிக் கடை நடத்த அனுமதி தாருங்கள்..! - குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகள்

தள்ளுவண்டிக் கடைகள் அமைக்க அனுமதி கோரி வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: தள்ளுவண்டிக் கடைகள் அமைக்க அனுமதி கோரி வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவை வெள்ளலூர் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டு பல்வேறு பகுதிகள் வசித்த வந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2800 வீடுகளில் சுமார் 2000 வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 



குடிசை மாற்று வாரியத்தால் வீடு ஒதுக்கப்பட்டவர்களில் சிலர் தள்ளுவண்டி கடை அமைக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தனர். 

தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வணிகத்திற்கு கடைகள் கட்டப்பட்டுள்ளது. அந்த கடைகளுக்கு ரூ.2500 என அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை வாடகைக்குத் தனியார் பெற்றுள்ளனர். இந்த குடியிருப்பில் வசிக்கும் பலர் தள்ளுவண்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால், வணிக வளாகங்களில் கடைகளை வாடகைக்கு எடுத்த சிலர் தள்ளுவண்டிக் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடைகள் அமைத்துள்ள வியாபாரிகளுக்குச் சாதகமாக பேசுகின்றனர். இங்கு வசிப்பவர்கள் ஏழ்மையான நிலையில் உள்ளதால் வெள்ளலூர் குடிசை மாற்று வாரியத்தில் தள்ளுவண்டி வியாபாரம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...