சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் அனுமதி சான்றிதழ் : உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தகவல்

சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் அனுமதி சான்றிதழ் வழங்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கோவை : சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் அனுமதி சான்றிதழ் வழங்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 



கணபதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் தமிழ்நாடு சாலையோர திருவிழா வியாபாரிகள் சங்கம், கோவை மாவட்ட தலைவர் தேவராஜ் பேசுகையில், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. திருவிழா காலங்களில் உணவு உட்பட பல்வேறு பொருட்களை தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை செய்யும் போது உள்ள நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. உணவு தர சான்றிதழ் உட்பட அரசின் அனுமதி எளிமையாகக் கிடைக்க வழி காணவேண்டிய தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை சிறப்பு முகாம்கள் அமைத்து அங்கீகார சான்றிதழ்கள் வழங்க ஆவண மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார். அது, தங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...