திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. 

திருப்பூர் முதலியாளையம் பகுதியில் மாநகராட்சி சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. சுமார் 6 ஏக்கர் நில பரப்பளவில் உள்ள இந்த குப்பைக் கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



இதனால், 5 கி.மீ. தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது. தீவிபத்து ஏற்பட்டதற்கு இதுவரை மாநகராட்சி எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இந்த புகையினை சுவாசிப்பதால் மூச்சுத் திணறல், உடல் உபாதைகள் ஏற்பட கூடிய நிலைமை வந்ததுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாடினர். 

தற்போது, தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள காரணத்தால் மாநகராட்சியின் பாதாள சாக்கடை கழிவு நீரை கொட்டி தீயை அணைக்கும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.



நேற்று இரவு சில சமூக விரோதிகளால் தீயை கொளுத்தியிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...