கோவையில் உலக சிட்டுக் குருவி தினத்தை கொண்டாடிய குழந்தைகள்

உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிட்டுக் குருவியை காப்பதன் அவசியம் குறித்து வனத்துறையினரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

கோவை: உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிட்டுக் குருவியை காப்பதன் அவசியம் குறித்து வனத்துறையினரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். 

சிறுமுகையை அடுத்த காந்தவயல் பகுதியில் செயல்படும் அரசு பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள் நேற்று சிறுமுகை வன அலுவலர்களுடன் சிட்டுக் குருவி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழக வனத்துறையினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சிட்டுக் குருவி ஆர்வலர் குருசாமி கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார். 



அப்போது, "சிட்டுக் குருவிகளுக்கு வாழ்வதற்குத் தகுந்தாற்போல் மரங்களில் கூடுகள் மற்றும் தானியங்களை வைக்க வேண்டும். கடந்த 2007-ம் ஆண்டு முதல் இதனைச் செய்து வருகிறோம். அதனால், எங்கள் வீட்டின் அருகில் ஏராளமான சிட்டுக் குருவிகளை காண முடிகிறது." என்றார்.



தொடர்ந்தது, நிலப்பரப்பு ஒருங்கிணைப்பாளர் டி.பூமிநாதன், தாமஸ் சாமுவேல் மற்றும் எஸ். சரவணன் உள்ளிட்டோ சிட்டுக் குருவிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விவரித்தனர். 

"நகர்ப்புற பகுதிகளில் சிட்டுக் குருவிகள் காணாமல் போனதற்கு, மரபுசார் வீடுகளை மறந்து கான்கிரீட் கட்டிடங்களே கட்டுவதே காரணம்." என்று பூமிநாதன் கூறினார்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...