சிறார்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை : கோவை போக்குவரத்து ஆணையர் பேட்டி

18 வயதுக்கு குறைவானவர்கள் மோட்டர் வாகனங்களை ஓட்டினால், அவர்களது பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.

கோவை : 18 வயதுக்கு குறைவானவர்கள் மோட்டர் வாகனங்களை ஓட்டினால், அவர்களது பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித் குமார் தெரிவித்துள்ளார். 

மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு -3-இன் படி வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கக்கூடாது. அதைப்போல, பிரிவு 4-இன் படி 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுவர்கள் வாகனத்தை இயக்கக்கூடாது. இந்த விதியை மீறினால் ரூ. 1,000 அபராதம் அல்லது 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த நிலையில், போக்குவரத்து விதிகளை மீறி ஓட்டுநர் உரிமம் இல்லாத 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுவர்களை, வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த அதிரடியான உத்தரவு சென்னையைத் தொடர்ந்து, கோவையிலும் தற்போது அமலுக்கு வந்துள்ளது. கோவை மாநகரில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதில், முக்கிய சாலைகளில் அதிவேகத்தில் வாகனம் ஓட்டும் சிறுவர்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல கோரிக்கைகளும் எழுந்தன. ஏற்கனவே, வழக்கமாக போலீசார் நடத்தும் வாகன தணிக்கையில் வீட்டு வேலையாக செல்கிறேன். ஒருசிலர் வேலைக்கு சென்ற தங்களது பெற்றோரை அழைத்து வர நாள்தோறும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துகிறேன் உள்ளிட்ட பல காரணங்களை தெரிவிக்கின்றனர். 

பின்னர், காவல்துறையினர் சிறுவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறுவதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால், தற்போது சட்டப்படி பாரபட்சமற்ற நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக கோவை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் கூறியதாவது :- தற்போது, கட்டாயமாக சென்னையைப் போல கோவையிலும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டக்கூடாது. விதியை மீறி சிறுவர்கள் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல, வாகன உரிமையாளர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பள்ளிவிடுமுறை நாட்கள் வரும் நிலையில், சிறுவர்கள் மோட்டார் வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் விபத்துகளை தடுக்கலாம், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...