திருப்பூரில் இடியுடன் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலவிய சீதோஷண நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலவிய சீதோஷண நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.



கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே திருப்பூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாலை குளிர்காற்று வீசியது. சிறிது நேரத்தில் தூறலாக ஆரம்பித்த மழை, பின்னர் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் வேகமாகப் பெய்ய ஆரம்பித்தது. இதனால், வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையின் காரணமாக திருப்பூரில் நிலவி வந்த கோடைக்கால சூழல் மாறி குளிர்காற்று வீசத் துவங்கியது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...