மாமனாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை

கோவையில் மாமனாரைக் குத்தி கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை : கோவையில் மாமனாரைக் குத்தி கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கோவை தாமுநகரை பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் பழனிசாமி(39).இவர் கோவை அம்மன்குளம் ஏரிமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ்(75) மகள் மாரியம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாட்டால் பழனிசாமி பிரிந்து சென்று விட்டார். அதனால் தன்னுடைய 2 மகள்களுடன் தாய் வீட்டுக்கு மாரியம்மாள் வந்துவிட்டார். பிறகு பழனிசாமி வேறு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார். 

மேலும், தன்னுடைய மகள்கள் இருவரையும் பார்ப்பதற்காக ஏரிமேட்டில் உள்ள செல்வராஜ் வீட்டுக்கு பழனிசாமி அடிக்கடி வருவார். பேத்திகளைப் பார்க்க விடாமல் மாமனார் செல்வராஜ் தடுத்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இந்நிலையில் கடந்த 22.08.16 தேதி அன்று, மகள்களைப் பார்ப்பதற்காக பழனிசாமி வந்தார். அவரை வீட்டினுள் அனுமதிக்காமலும், பேத்திகளை பார்க்க விடாமல் செல்வராஜ் தடுத்தார். இருவருக்கும் இடையே கைகலப்பானது. இதில், பழனிசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி மாமனார் செல்வராஜை கொலை செய்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு கோவை 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதி கார்த்திக்கேயன் முன்னிலையில் கொலை வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று நடந்தது. இதில், பழனிசாமி மீதான கொலைக்குற்றம் நிருப்பிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் பழனிசாமி அடைக்கப்பட்டார். 

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...