திருப்பூரில் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாறைக்குழியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாறைக்குழியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 



பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சுதர்சன், சமீர்கான், மனோகர் மற்றும் சுபாஷ் ஆகியோர் 11ம் வகுப்பு பயின்று வருகின்றனர். தேர்வுக்காகப் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நால்வரும் தங்கள் நண்பர் மூவருடன் வேலம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு குளிக்கச் சென்றனர். 

நீரில் இறங்கிக் குளித்த பொழுது சுதர்சன்,சமீர் மற்றும் மனோகர் மூவரும் ஒன்றன் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். அதனைப் பார்த்த அவர்களது நண்பர்கள் உடனடியாக மேலே வந்து அவர்களை காப்பாற்றுமாரு கூச்சலிட்டனர். ஆனால் நீரில் மூழ்கிய மூவரும் உயிரிழந்தனர். 

இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் மங்கலம் காவல் நிலையம் மற்றும் பல்லடம் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி இறந்த மூன்று மாணவர்களில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்து மூன்று மாணவர்கள் பாறைக்குழியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...