ஈரோட்டில் இன்று தி.மு.க., மாநாடு: மேளதாளங்களுடன் புறப்பட்ட தி.மு.க. தொண்டர்கள்

ஈரோட்டில் நடக்கும் தி.மு.க., மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள் மேளதாளங்களுடன் புறப்பட்டு சென்றனர்.

மேட்டுப்பாளையம்: ஈரோட்டில் நடக்கும் தி.மு.க., மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள் மேளதாளங்களுடன் புறப்பட்டு சென்றனர்.

ஈரோட்டில் நடைபெற உள்ள தி.மு.க. மண்டல மாநாட்டில் இன்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க.வினர் ஈரோட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதியில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் தலைமையில் காரமடை நால்ரோடு பகுதில் இருந்து மேளதாளங்களுடன் சுமார் 50 வாகனங்களில் உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர். தி.மு.க., ஆதரவு பெண்கள் ஆர்வத்துடன் முளைப்பாரி எடுத்து வந்து மாநாட்டில் கலந்துகொள்ள சென்றனர். மாநாட்டிற்கான வாகனங்களை மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ் சண்முகசுந்தரம் கொடி அசைத்து வழி அனுப்பிவைத்தார்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...